Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் சிறப்பு தொழுகை

ஆகஸ்டு 12, 2019 07:36

புதுச்சேரி: பக்ரீத் பண்டிக்கையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்ஸாமியர்கள் கலந்து கொண்டனர்.

இஸ்ஸாமிய பண்டிகைகளில் மிக முக்கிய பண்டியகையான பக்ரித் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் இன்று புதுச்சேரி கடற்கரை சாலையிலுள்ள காந்தி திடல் முன்பு இஸ்ஸாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இந்த தொழுகையில் அண்டை மாநிலமான கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதே போன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்